மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

  • local
  • August 30, 2023
  • No Comment
  • 75

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளன.

உயர் நீதிமன்றத்தினால் மீண்டும் இந்த மனுக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால உள்ளிட்டவர்களுக்கு எதிராக 12 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு உத்தரவு
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி உச்ச நீதிமன்றின் முழுமையான நீதியரசர்கள் அடங்கிய குழாமினால் இந்த வழக்கு விசாரணை செய்யப்பட உள்ளது.

ஏற்கனவே இந்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.எனினும் பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய மீளவும் இந்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நட்டஈடு செலுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு அமைய மேலும் 85 மில்லியன் ரூபா நட்டஈட்டுத் தொகையை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்குமாறு கோரி மைத்திரிபால சிறிசேன கடந்த ஜூலை மாதம் 11ஆம் திகதி நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply