மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

  • local
  • August 30, 2023
  • No Comment
  • 50

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளன.

உயர் நீதிமன்றத்தினால் மீண்டும் இந்த மனுக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால உள்ளிட்டவர்களுக்கு எதிராக 12 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு உத்தரவு
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி உச்ச நீதிமன்றின் முழுமையான நீதியரசர்கள் அடங்கிய குழாமினால் இந்த வழக்கு விசாரணை செய்யப்பட உள்ளது.

ஏற்கனவே இந்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.எனினும் பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய மீளவும் இந்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நட்டஈடு செலுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு அமைய மேலும் 85 மில்லியன் ரூபா நட்டஈட்டுத் தொகையை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்குமாறு கோரி மைத்திரிபால சிறிசேன கடந்த ஜூலை மாதம் 11ஆம் திகதி நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply