சர்ச்சைக்குரிய மேர்வின் சில்வாவின் கருத்துக்கு சந்திரகுமார் கண்டனம்

சர்ச்சைக்குரிய மேர்வின் சில்வாவின் கருத்துக்கு சந்திரகுமார் கண்டனம்

  • local
  • August 16, 2023
  • No Comment
  • 39

மிக மோசமான யுத்தத்தை கடந்து வந்தள்ள நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும், சமத்துவத்தையும் கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் தலையில் எதுவுமில்லாதவர்கள் போன்று மேர்வின் சில்வா கருத்து தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியதும், கவலைக்குரியதுமாகும் என சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்றையதினம் (15.08.2023) கருத்து தெரிவிக்கையில், 

வடக்கில் விகாரைகள் மீதோ அல்லது பிக்குகள் மீதோ கை வைத்தால் தமிழர்களின் தலைகளுடன் களனிக்கு திரும்புவேன் என மக்கள் மத்தியில் வெறுப்பையும் இனகுரோதத்தையும் ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியிருப்பது தலையில் எதுவும் இல்லாதவர்களின் பேச்சு போன்றே அமைந்துள்ளது.

நிரந்தர அமைதி

இந்த நாட்டில் இன்னும் நிலையான அமைதி நிலாவாமைக்கு ஒவ்வொரு இனத்திற்குள்ளும் மேர்வின் சில்வா போன்றவர்கள் இருப்பதே காரணமாக இருக்கிறது. இவர்கள் இந்த நாட்டின் சாபக்கேடுகள்.

ஒவ்வொரு இனத்திற்குள்ளும் இருக்கின்ற மேர்வின் சில்வா போன்றவர்கள் சமூகத்திலிருந்து அகறப்பட வேண்டியவர்கள்.

வெறுப்பு பேச்சுக்கள், அப்பாவி மக்களிடம் இனவாதத்தை தூண்டிவிடுகின்ற செயற்பாடுகள், இந்த நாட்டை ஒரு போதும் நிரந்தர அமைதியை நோக்கி கொண்டு செல்லாது.

ஆகவே பொது மக்கள் மேர்வின் சில்வா போன்றோரின் கருத்துக்களுக்கு இடம்கொடுக்காது நிதானமாக சிந்தித்து நாட்டை நிலையான அமைதிக்கும் முன்னேற்றத்திற்கு கொண்டு செல்லும் வகையில் செயற்பட வேண்டும்.

மேலும் அனைத்து இனங்களுக்கிடையேயும் நல்லிணக்கமும், சமத்துவம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply