மருந்து உற்பத்தியில்இலங்கை வெற்றி – அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம்
- local
- January 2, 2026
- No Comment
- 28
இலங்கை அரச மருந்தாக்கல் உற்பத்தி கூட்டுத்தாபனம், 2025 ஆம் ஆண்டில் தமது வரலாற்றில் அதிகளவான மருந்துகளை உற்பத்தி செய்து வெற்றி கண்டுள்ளது .
அதன்படி, 2025 ஆம் ஆண்டில் மொத்தமாக 3,625 மில்லியன் மாத்திரைகள் கூட்டுத்தானம் உற்பத்தி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் வரலாற்றில் முதல் முறையாக, மருத்துவ விநியோகப் பிரிவால் வழங்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் எந்த பற்றாக்குறையும் இல்லாமல் வழங்க முடிந்ததாக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை 2025 ஆம் ஆண்டில் கூட்டுத்தாபனம் ஐந்து புதிய மருந்து தயாரிப்புகளையும் சந்தைக்கு அறிமுகப்படுத்தியது.
இந்தநிலையில், 2025 ஆம் ஆண்டிற்கான, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் மொத்த வருமானம் 27.06 பில்லியன் ரூபாய்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.