பேருந்தை அலங்கரிக்கும் சாரதிகளுக்கு எச்சரிக்கை

  • local
  • October 4, 2023
  • No Comment
  • 73

மின் விளக்குகள் மேலதிக அலங்கார பொருத்துகள் பொருத்தப்பட்டு விரிவாக மாற்றியமைக்கப்பட்ட பல பொது போக்குவரத்து பேருந்துகளுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் .

பொதுமக்களின் முறைப்பாடுகளை அடுத்து பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பேருந்துகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த உயர் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

சில பேருந்துகள் அஜாக்கிரதையாக செலுத்தப்படும் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவி வருவதாக அவர் கூறினார்.

அதன் உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் உதவியாளர்களை அடையாளம் காண 54 பஸ்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு வரவழைக்கப்பட்டதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த அவர் கைப்பற்றப்பட்ட பேருந்துகளின் உரிமையாளர்களுக்கு தடை உத்தரவு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply