ஐரோப்பா செல்ல முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

ஐரோப்பா செல்ல முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

  • local
  • September 11, 2023
  • No Comment
  • 72

ஐரோப்பா உட்பட மேற்குலக நாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பாரியளவிலான நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு தொழிலுக்காக அனுப்புவதாக கூறி அதிகளவிலான இளைஞர் யுவதிகள் ஏமாற்றப்பட்டு வருவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

இதனால் முறையான வழிமுறைகளை மாத்திரம் பயன்படுத்தி நம்பகத்தன்மையுடன் கூடிய கல்வி நிலையங்கள், முகவர் நிலையங்கள் என்பனவற்றின் ஊடாக பயணங்களை மேற்கொள்ளுமாறு பொலிஸார் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்கள். 

பொலிஸில் முறைப்பாடு

அண்மைக்காலமாக வெளிநாடு செல்வதற்காக இலங்கையர்கள் பெருமளவு பணத்தை இழந்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் பொலிஸார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இதேவேளை, ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடும் முகவர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையம்

அதற்கமைய கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply