NPP  எதிரான குழுக்களுடன்   இணைந்து  தொழிற்பட  தீர்மானம் – ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கை

NPP எதிரான குழுக்களுடன் இணைந்து தொழிற்பட தீர்மானம் – ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கை

  • local
  • May 15, 2025
  • No Comment
  • 88

தேசிய மக்கள் சக்திக்கு எதிராக இருக்கின்ற அனைத்து குழுக்களுடனும் எதிர்காலத்தில் கலந்துரையாடி உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இணங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கை வௌியிட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடனான கலந்துரையாடலின்போதே ரணில் விக்கிரமசிங்க இத்தீர்மானம் எட்டப்பட்டதாக கூறப்படுகிறது

இந்த கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் நலீன் பண்டார கலந்துகொண்டிருந்தார்.

 

முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஸ, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வா, துமிந்த திசாநாயக்க, பொதுஜன ஐக்கிய முன்னணியின் அனுர பிரியதர்ஷன யாப்பா, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிலுள்ள பல உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.

 

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பெயர்ப்பட்டியலை தயாரிப்பதற்காக குறித்த கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் இன்று(15) சந்திக்கவுள்ளனர்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…