சர்ச்சையை ஏற்படுத்திய தேசிய கீத விவகாரம்! முதன்முறையாக மனம் திறந்த பாடகி

சர்ச்சையை ஏற்படுத்திய தேசிய கீத விவகாரம்! முதன்முறையாக மனம் திறந்த பாடகி

  • world
  • August 9, 2023
  • No Comment
  • 62

பாடகி உமாரா சிங்கவன்சவிற்கு மேலதிகமாக கிரிக்கெட் சபை மற்றும் கல்வி அமைச்சின் பிரதிப்பணிப்பாளர் ஆகியோரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

2023 எல்.பி.எல் ஆரம்ப விழாவில் தேசிய கீதம் பாடும் போது தேசிய கீத பாடல் வரிகள் தவறாக உச்சரிக்கப்பட்டுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில்,தேசிய கீதத்தை பாடும் போது ‘மாஹ்தா’ என்ற வார்த்தைகளை உச்சரிக்கவில்லை என்றும், அதிக சுருதியில் பாடியதாகவும் உமாராவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியான காரணம்
மேலும், இலத்திரனியல் ஊடகங்களில் பாடல் எதிரொலித்ததால், ‘மாதா’ என்ற வார்த்தை ‘மாஹ்தா’ என பிரசாரம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

கல்வி அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய கீதம் குறைந்த தொனியில் பாடப்பட வேண்டும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.இது தொடர்பில் புலனாய்வுத்திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இந்த வாரத்திற்குள் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோகவிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாடகி உமாரா சின்ஹவன்ச தேசிய கீதத்தை சிதைத்து பாடியதாக குற்றம் சாட்டப்பட்டதையடுத்து தனது முகநூல் கணக்கில் மன்னிப்புக் கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply