G 20 உச்சி மாநாடு பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்

G 20 உச்சி மாநாடு பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்

  • world
  • September 8, 2023
  • No Comment
  • 65

இந்திய தலைநகர் புதுடெல்லியில், இந்த வார இறுதியில், அதாவது செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் G 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

G 20 என்றால் என்ன?

G 20 என்பது The Group of 20 என்பதன் சுருக்கமேயாகும். அந்த அமைப்பின் கீழ் 19 நாடுகள் உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தையும் சேர்த்தால் எண்ணிக்கை 20 ஆகிறது.

அர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, ஐக்கிய ராஜ்ஜியம், அமெரிக்கா, ஆகிய நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியம் இணைந்த‌ பொருளாதார கூட்ட‌மைப்பே G 20 ஆகும்.

உக்ரைனுக்கு அழைப்பு இல்லை

40 உலக நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. G 20 நாடுகளின் தலைவர்களுடன், சிறப்பு விருந்தினர்களாகவும் பலர் அழைக்கப்பட்டுள்ளனர்.

மாநாட்டில் உக்ரைன் ரஷ்யப் போர் முக்கிய இடம் வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், உக்ரைன் ஜனாதிபதியான ஜெலன்ஸ்கி மாநாட்டில் பங்கேற்கவில்லை. காரணம், உக்ரைன் G 20 நாடு அல்ல.

அத்துடன், ஜெலன்ஸ்கிக்கு சிறப்பு விருந்தினராகவும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அதற்கு மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் காரணம் என கூறப்படுகிறது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply