FIFA: கால்பந்து உலகக் கோப்பையில் ஹிஜாப் அணிந்து விளையாடும் முதல் வீராங்கனை! பின்னணி என்ன!?

FIFA: கால்பந்து உலகக் கோப்பையில் ஹிஜாப் அணிந்து விளையாடும் முதல் வீராங்கனை! பின்னணி என்ன!?

  • Sports
  • August 3, 2023
  • No Comment
  • 93

FIFA கால்பந்து உலகக் கோப்பைத் தொடரில் ஹிஜாப் அணிந்து விளையாடும் முதல் வீராங்கனையானார் நௌஹைலா பென்சினா.

இந்தியா உட்பட உலகெங்கிலுமுள்ள பல நாடுகளில் ஹிஜாப் என்பது பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருந்து வருகிறது.

கல்வி வளாகங்கள், வேலை செய்யும் நிறுவனங்கள், விளையாட்டு உள்ளிட்ட இடங்களில் இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிவது என்பது பெரும் விவாதங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்திய வண்ணம் இருக்கின்றன.

குறிப்பாக, விளையாடும்போது வீராங்கனைகள் ஹிஜாப் அணியக் கூடாது, அது அசௌகரியமானது என்று உலகெங்கிலும் பல நாடுகளின் விளையாட்டுத்துறை அமைப்புகள் ஹிஜாப் அணிவதற்கு அனுமதி மறுத்துள்ளது.

நௌஹைலா பென்சினா

அந்த வகையில், உலகக் கால்பந்து கூட்டமைப்பான ‘FIFA’வும் 2007ம் ஆண்டு முதல், “விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் விளையாடும்போது தங்களுக்கோ அல்லது பிறருக்கோ காயம் ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு உடைகளையும், அணிகலன்களையும் அணியக் கூடாது. அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அல்லது அனுமதியளிக்கப்பட்டுள்ள உடைகளையும், உபகரணங்களை மட்டுமே அணிய வேண்டும்” என்று கூறி ஹிஜாப் அணிவதற்குத் தடை விதித்திருந்தது.

`FIFA’வின் இந்த ஹிஜாப் தடை இஸ்லாமியர்களின் உரிமையைப் பறிப்பதாகவும், இஸ்லாமியப் பெண்கள் கால்பந்து போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை மறுப்பதாகவும் பெரும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் எழுந்தன. இதையடுத்து 2014-ம் ஆண்டு இந்தத் தடை நீக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ‘2023 FIFA Women’s World Cup’ தொடரில் கடந்த ஜூலை 24ம் தேதி ஜெர்மனிக்கு எதிரான போட்டியில் மொராக்கோ அணியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனையான ‘நௌஹைலா பென்சினா’ ஹிஜாப் அணிந்து களத்தில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போட்டியில் அவர் களமிறங்கவில்லை. இதையடுத்து கடந்த ஜூலை 30ம் தேதி தென் கொரியாவிற்கு எதிரான போட்டியில் ஹிஜாப் அணிந்து களத்தில் விளையாடினார்.

இதன்மூலம், FIFA கால்பந்து உலகக் கோப்பைத் தொடரில் ஹிஜாப் அணிந்து விளையாடும் முதல் வீராங்கனையானார் 25 வயதாகும் நௌஹைலா பென்சினா.

Related post

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்  ஆயுஷ் ஷெட்டி

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்…

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 (US Open Badminton Super 300) தொடரில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார். பேட்மிண்டன் ஆடவர்…
சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் க்ளென் மேக்ஸ்வெல் , கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். 2015 மற்றும் 2023ஆம் ஆண்டு 50 ஓவர்…
“தோனி ஒரு நம்பமுடியாத வீரர்”- டெவால்ட் ப்ரெவிஸ்

“தோனி ஒரு நம்பமுடியாத வீரர்”- டெவால்ட் ப்ரெவிஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் மோசமாகச் செயல்பட்டு, முதல்முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தோடு விடைபெற்றிருந்தாலும், கிட்டத்தட்ட அடுத்த சீசனுக்கான இளம் அணியை உருவாக்கியிருப்பதாகவே தெரிகிறது.…

Leave a Reply