அஸ்வெசும நல்புரி வேலைத்திட்டத்தை இடை நிறுத்த வேண்டும்! ரணிலிடம் கோரிக்கை

அஸ்வெசும நல்புரி வேலைத்திட்டத்தை இடை நிறுத்த வேண்டும்! ரணிலிடம் கோரிக்கை

  • local
  • August 11, 2023
  • No Comment
  • 49

அஸ்வெசும நல்புரி வேலைத்திட்டத்தை இடைநிறுத்துமாறு அரசாங்கத்தின் உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியுள்ளது.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட நிவாரணத் திட்டத்தின் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை குறுகிய காலத்திற்கு குறித்த வேலைத்திட்டத்தை இடைநிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எனினும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார மற்றும் அரசாங்கத்தின் 62 உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

குறித்த கடிதத்தில் அஸ்வெசும திட்டத்தின் மூலம் உண்மையிலேயே தகுதியானவர்கள் மானியங்களை இழந்துள்ளதாகவும், தகுதியற்றவர்கள் மானியங்களை பெற்றுள்ளதாகவும் அதன் மூலம் இந்த திட்டம் விமர்சிக்கப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.மேலும் பொருளாதார மற்றும் அரசியல் குழப்பங்களில் இருந்து நாட்டை விடுவிப்பதற்காக ஜனாதிபதியின் பங்களிப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நம்பிக்கை இதன் காரணமாக சீர்குலைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, மானியம் பெற தகுதியுடைய இலட்சக்கணக்கான ஏழை மக்கள் தகுதியின் குறைபாடுகளால் மானியங்களை இழந்துள்ளனர் என்றும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த கடிதத்தில் பல மாநில அமைச்சர்களும் கையெழுத்திட்டுள்ளனர்

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply