ஜனாதிபதி தேர்தலுக்காக புதிய கூட்டணி!

ஜனாதிபதி தேர்தலுக்காக புதிய கூட்டணி!

  • local
  • August 21, 2023
  • No Comment
  • 64

இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள திட்டமிட்டு வருகின்றன.

இதற்கமைய தேர்தல் எப்போது நடைபெறும் என்பது நிச்சயமற்றதாகவே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணிகளை அமைக்க உத்தேசித்துள்ளன.

சஜித்-டளஸ் கூட்டணி

சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் டளஸ் அழகப்பெரும தலைமையிலான 13 பேர் கொண்ட அணியும் கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதன் காரணமாக தேர்தலில், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டியிடுவார். வெற்றிப்பெற்றால் டளஸ் அழகப்பெருமவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் என்ற அடிப்படையிலேயே இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ரணில் தலைமையிலான கூட்டணி

இதேவேளை ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவாக ஆதரவை திரட்டி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தற்போது அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.

எனினும் தாம் இலங்கையில் இல்லாத இரண்டு வாரக்காலத்தில் ரணிலுக்கான கூட்டணி முயற்சியின் செயற்பாடுகளை சுசில் பிரேம்ஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா, நளின் பெர்னாண்டோ மற்றும் லசந்த அழகியவன்ன ஆகியோர் மேற்கொள்வர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி வைப்பதே இந்த கூட்டணியின் நோக்கமாகும்.

மேலும், தற்போது வரை தமக்கு 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply