ஜனாதிபதி தேர்தலுக்காக புதிய கூட்டணி!

ஜனாதிபதி தேர்தலுக்காக புதிய கூட்டணி!

  • local
  • August 21, 2023
  • No Comment
  • 52

இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள திட்டமிட்டு வருகின்றன.

இதற்கமைய தேர்தல் எப்போது நடைபெறும் என்பது நிச்சயமற்றதாகவே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணிகளை அமைக்க உத்தேசித்துள்ளன.

சஜித்-டளஸ் கூட்டணி

சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் டளஸ் அழகப்பெரும தலைமையிலான 13 பேர் கொண்ட அணியும் கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதன் காரணமாக தேர்தலில், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டியிடுவார். வெற்றிப்பெற்றால் டளஸ் அழகப்பெருமவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் என்ற அடிப்படையிலேயே இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ரணில் தலைமையிலான கூட்டணி

இதேவேளை ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவாக ஆதரவை திரட்டி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தற்போது அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.

எனினும் தாம் இலங்கையில் இல்லாத இரண்டு வாரக்காலத்தில் ரணிலுக்கான கூட்டணி முயற்சியின் செயற்பாடுகளை சுசில் பிரேம்ஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா, நளின் பெர்னாண்டோ மற்றும் லசந்த அழகியவன்ன ஆகியோர் மேற்கொள்வர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி வைப்பதே இந்த கூட்டணியின் நோக்கமாகும்.

மேலும், தற்போது வரை தமக்கு 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply