கொழும்பில் சடலத்தால் பொலிஸாருக்கு ஏற்பட்ட குழப்பம் – வீதியில் நடந்த குளறுபடி

கொழும்பில் சடலத்தால் பொலிஸாருக்கு ஏற்பட்ட குழப்பம் – வீதியில் நடந்த குளறுபடி

  • local
  • August 17, 2023
  • No Comment
  • 77

பொரளை பிரதேசத்தில் கவனக்குறைவாக ஓட்டிச் சென்ற இறுதி ஊர்வலத்திற்கு பயன்படுத்தும் வாகனத்தை தடுத்து நிறுத்திய பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாகனத்தை பொலிஸாரிடம் எடுத்துச் சென்றுள்ளனர்.

இதன் போது அதில் சடலம் ஒன்று இருப்பதைக் கண்டு பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொரளை பொலிஸ் அதிகாரிகள் பொரளை டி.எஸ். சேனநாயக்க சந்தியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போது, கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதற்காக இறுதி ஊர்வல வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டது.அத்துடன், சாரதி மதுபோதையில் இருந்ததால் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

வாகன சாரதி
வாகனம் பொரளை பொலிஸாருக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர், காரை விட்டு இறங்கிய சாரதி, பின்னால் சடலம் இருப்பதாக அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இதனால் குழப்பமடைந்த பொலிஸார், மற்றொரு இறுதி ஊர்வல வாகனத்தை அழைத்து சடலத்தை அனுப்பியுள்ளனர்.

பிரபல மலர்சாலை
குடிபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தினர். சடலம் கொழும்பில் உள்ள பிரபல மலர்சாலைக்கு சொந்தமானது.

அந்த சந்தர்ப்பத்தில் சடலத்துடன் அந்த வாகனத்தை ஓட்டி சென்றவர் மலர்சாலையின் மேலாளர் ஓட்டிச் சென்றது என பொலிஸார் தெரிவித்தனர்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply