Bobby Simha: சென்னையில் கார் விபத்து; 6 வாகனங்கள் சேதம்; போதையில் இருந்த ஓட்டுநர் கைது!

Bobby Simha: சென்னையில் கார் விபத்து; 6 வாகனங்கள் சேதம்; போதையில் இருந்த ஓட்டுநர் கைது!

  • Cinema
  • April 19, 2025
  • No Comment
  • 103

தேசிய விருது பெற்ற நடிகரான பாபி சிம்ஹாவின் கார் சென்னை கிண்டியில் உள்ள கத்திப்பாரா மேம்பாலத்தில் விபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உள்ளிட்ட அனைவரும் உயிர் தப்பியிருக்கின்றனர். மது போதையில் காரை ஓட்டிய ஓட்டுநர் புஷ்பராஜ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேதமடைந்த காரை காவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர். விபத்து குறித்து ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனர்.

பாபி சிம்ஹாவின் தந்தையை இறக்கி விட்டு வந்த போது இந்த விபத்து நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

முதல் வாகனத்தை இடித்தபோதே காரை நிறுத்தாமல் சென்றதுதான் அடுத்தடுத்து வாகனங்களில் மோதி பெரும் விபத்தாக மாறியதற்கு காரணம் என செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் காயமடைந்த மூவரையும் பரங்கிமலை போக்குவரத்து காவலர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…