முல்லைத்தீவில் நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தொடங்கிவைப்பு

முல்லைத்தீவில் நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தொடங்கிவைப்பு

  • local
  • August 4, 2023
  • No Comment
  • 89

வடமாகாணத்தில் பிரதேச மக்களின் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தி குடிநீர் பிரச்சினையை தீர்க்க 50 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாக கடந்த 2021 ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.அதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு அதற்கான நிர்மானப் பணிகள் நிறைவுச் செய்ப்பட்டு நேற்று (03.08.23)திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கூழாமுறிப்பு,கற்ச்சிலைமடு,காதலியார் சம்மளங்குளம்,ஒலுமடு ஆகிய கிராமங்களிற்கு சுத்தமான குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க அவர்களினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

குடி நீர் பிரச்சனைக்கு தீர்வு

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவில் சிறுநீரக நோயாளர்கள் காணப்படும் நிலையில் வடக்கில் முல்லைத்தீவு,கிளிநொச்சி,வவுனியா மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் 23 நனோ சுத்திகரிப்பு குடிநீர் திட்டங்களும், வவுனியா மாவட்டத்தில் 23 நனோ சுத்திகரிப்பு குடிநீர் திட்டங்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 குடிநீர் திட்டங்களும் நிர்மானம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக 209 மில்லியன் ரூபா செலவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சுத்தமான குடிநீர் இல்லாது மக்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.அத்தோடு தீரா சிறுநீரக நோயினாலும் அவதிப்படுகின்றனர். இந்த நிலையினைப் போக்கிட சிறந்த செயற்றிட்டமாக நனோ நீர் சுத்திகரிப்பு நிலையம் கையளிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவாட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர்  காதர் மஸ்தான், நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சத்தியானந்த, வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துளசேன, முல்லத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் உமாமகேஸ்வரன் , ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர்  ஜெயராணி, கிராம அலுவலகர்கள், உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply