மக்கள் ஆணைக்கு எதிராக யாராவது செயற்படுவார்களாயின் அந்த முயற்சி முறியடிக்கப்படும் – ஜனாதிபதி

மக்கள் ஆணைக்கு எதிராக யாராவது செயற்படுவார்களாயின் அந்த முயற்சி முறியடிக்கப்படும் – ஜனாதிபதி

  • local
  • May 15, 2025
  • No Comment
  • 35

எதிர்க்கட்சிகள் சிறிய குழுக்களுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க முயற்சிக்குமாயின் அந்த செயற்பாடு அரசியலமைப்பு, சட்டம் மற்றும் அரசியல் அதிகாரம் என்பவற்றைப் பயன்படுத்தி முறியடிக்கப்படும் என, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பியின் 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

பிரிந்து தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட்சிகள் உள்ளூராட்சி மன்றங்களில் ஒன்றிணைய முயல்கின்றன. அவ்வாறான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகவிருந்தால், அவ்வாறான தேர்தலை நாளைய தினமே நடத்துவதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.

தற்போது தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கூறுகின்ற கருத்துக்களில் உள்ள தவறுகளை மாத்திரமே எதிர்க்கட்சியினரால் சுட்டிக்காட்ட முடிகிறது. இந்தநிலையில் 152 உள்ளூராட்சி மன்றங்களில் ஆரம்பத்திலேயே தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும்.

ஒரு சிலருக்கே ஆட்சியமைக்குமாறு மக்கள் உள்ளூராட்சி மன்றங்களில் வாக்குகளை வழங்கினர். ஏனையோரை வெறுமனே உள்ளூராட்சி மன்றங்களைப் பார்வையிட்டு வருவதற்காக மக்கள் வாக்களித்துள்ளனர். எனவே, மக்களுக்கு பணியாற்ற வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.

இதன்படி, மக்கள் ஆணைக்கு எதிராக யாராவது செயற்படுவார்களாயின் அரசியலமைப்பு, சட்டம் மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த முயற்சி முறியடிக்கப்படும் என, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…