ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

  • local
  • April 19, 2025
  • No Comment
  • 68

உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மைத்ரி குணரத்ன தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்றைய தினம் முறைப்பாடொன்றை பதிவுசெய்ததைத் தொடர்ந்து, ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த மைத்ரி குணரத்ன இவ்வாறு குறிப்பிட்டார்.

”உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வாக்களிக்கக்கூடும் என தற்போது அரசாங்கத்திற்குப் புலனாய்வு அறிக்கைகளின் ஊடாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதன் காரணமாகவே ஜனாதிபதி தற்போது தேர்தல் மேடைகளில் எல்லாம், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திசைக்காட்டிக்கு அதிகாரம் வழங்கப்படாவிட்டால், அந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாது என தேர்தல் விதிகளை மீறும் வகையில் கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்.

ஜனாதிபதியின் இந்த கருத்து சட்டத்திற்கு முரணானது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், அந்த உள்ளூராட்சி மன்றங்களுக்குக் கட்டாயமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும். எனவே ஜனாதிபதியின் இந்த கருத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என மைத்ரி குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…