கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு

கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு

  • local
  • May 13, 2025
  • No Comment
  • 92

 கொத்மலை – கெரண்டிஎல்ல பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

விபத்தில் 53 பேர் காயமடைந்துள்ளனர்.

 

விபத்தில் உயிரிழந்தவர்களில் ஆளடையாளம் உறுதிப்படுத்தப்பட்ட 19 பேருக்காக தலா 10 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை இன்று வழங்குவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

 

ஜனாதிபதி நிதியத்திலிருந்து இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது.

 

பொலிஸார், இலங்கை பேக்குவரத்து சபை மற்றும் மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தினரால் இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பஸ்ஸில் எவ்வித இயந்திரக் கோளாறும் ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

 

இதனிடையே ​கொத்மலை பஸ் விபத்து தொடர்பான விசாரணைகளுக்காக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தலைமையில் ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

 

இந்தக் குழுவில் பிரதி பொலிஸ் மாஅதிபர் ருவண் குணசேகர, பிரதி பொலிஸ் மாஅதிபர் மஞ்சுள செனரத், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல மற்றும் பொறியியலாளர் கே.கே.காஹிங்கல ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…